Tuesday 24 March 2015

பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க புகார் பெட்டிகள் திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் பேட்டி

பொதுமக்கள் குறை களை தெரிவிக்க புகார் பெட்டிகள் வைக்கப்பட் டுள்ளதாக திருவாரூர் மருத்துவக்கல்லூரி முதல் வர் மீனாட்சிசுந்தரம் கூறி னார்.

புகார் பெட்டிகள்

திருவாரூர் மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் செய்ய வேண்டிய வசதிகள் குறித்து ஆலோசனை தெரிவிக்கவும், வசதிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க வசதியாக 3 இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் நவீன மருத்துவ கருவிகளும் புதிதாக பொருத்தப்பட் டுள்ளன.

இது தொடர்பாக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்து வமனை முதல்வர் மீனாட்சி சுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் அனைத் தும் முழுவீச்சில் நிறைவேற் றப்பட்டு வருகின்றன. மருத்து வமனையை எந்நேரமும் தூய்மையாக வைத்திருக்கும் வகையில் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைகளுக்கு உடனுக்குடன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே மருத் துவம் பார்க்கப்படுகிறது.

அறுவை சிகிச்சைகள்

கடந்த மாதம் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு திருவாரூர் மருத்துவமனையிலேயே டாக்டர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தார்கள். அதேபோல ரத்தம் தொடர்பான நோய் களால் பாதிக்கப்பட்டிருந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நல்ல முறையில் பிரசவம் பார்க்கப் பட்டது. தனியார் மருத்துவ மனையில் ரூ.3½ லட்சம் செலவு பிடிக்கும் இந்த சிகிச்சை இலவசமாக மருத் துவக்கல்லூரியில் பார்க்கப் பட்டது. உயர்ந்த தரத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் அனைத்து வசதி களும் தயார் நிலையில் உள்ளன.

நவீன கருவிகள்

நவீன இ.சி.ஜி., செயற்கை சுவாச கருவிகள், உயிர் காக்கும் மருந்துகள் அடங்கிய கருவிகள், ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு கண்டு பிடிக்கும் கருவி, காது அகநோக்கி உள்ளிட்ட கருவிகள் மருத்துவமனையில் பொருத் தப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை பொதுமக்கள் எழுத்து மூலமாக தெரிவிப் பதற்கு வசதியாக நுழைவாயில், முதல்வர் அலுவலகம், புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு ஆகிய இடங்களில் புகார் பெட்டிகள் புதிதாக வைக்கப் பட்டுள்ளன. இந்த புகார் பெட்டிகள் மூலமாக பொது மக்கள் தங்கள் புகார்களை, கோரிக்கைகளை, ஆலோசனைகளை தெரிவிக் கலாம்.

இவ்வாறு அவர் கூறி னார்.

No comments:

Post a Comment