Wednesday 25 March 2015

முத்துபேட்டை அருகே 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது




திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் புதன்கிழமை அதிகாலை 20 கிலோ கடத்தல் தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் தங்கம் கடத்துவதாக கோவை மத்திய வருவாய் நுண்ணறிவு புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தையடுத்து போலீஸார் புதன்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தியாவில் தங்கம் இறக்குமதிக்கு வரி அதிகாிக்கப்பட்டதால் கடந்த ஓராண்டாக கட ல் மார்க்கமாகவும், விமானம் மூலமும் அதிகளவில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதைத்தடுக்கும் வகையில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினா் கடும் சோதனை செய்து கடத்தப்பட்டும் தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம், திருவாரூர் மாவட்டம் கோடியக்கரை ஆகிய பகுதி களில் கடல் மார்க்கத்தை பயன்படுத்தி கடந்த ஓராண்டில் 10-க்கும் மேற்பட்ட முறை 500 கிலோக்கு மேல் தங்கம் பிடிபட்டு, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் தங்கம் கடத்தப்படுவதாக கோவை மத்திய வருவாய் நுண்ணறிவு புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலி ன்படி புதன்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனா.

அப்போது முத்துப்பேட்டை புறவழிச்சாலையில் சந்தேகப்படும் வகையில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்த போது, காருக்குள் 21 கிலோ தங்கம் இருந்தது கண்டு பிடிக்கப்ட்டது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட 3 பே ரை கைது செய்து திருவாரூர் குமரன்கோயில் தெருவிலுள்ள மத்திய அரசின் சுங்கம் மற்றும் கலால் அலுவலகத்தில் வைத்து விசாரனை மேற்கொண்டு வருகிறன்றனா். தங்கம் கடத்தியவா்கள் சுதாகரன் என்பவர் உள்ளிட்ட இருவர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் முழு விவரம் போலீஸாரின் விசாரனைக்கு பின்னரே முழு விவரம் தெரியவரும்.

நன்றி 
தின மணி 

No comments:

Post a Comment