Saturday 14 March 2015

திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் விழிப்புணர்வு வாரம் கொண்டாட முடிவு: ஆட்சியர்


திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் குடிநீர் விழிப்புணர்வு வாரம் கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஊரக குடிநீர் மற்றும் சுகாதார விழிப்புணர்வு வாரம் குறித்த முன்னேற்பாடு கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

நம் உடல்நலம் பேணுகின்ற குடிநீரின் தன்மையில் காணும் பாதிப்பை பொதுமக்கள் முன்னிலையில் பரிசோதித்து அவர்கள் பருகும் நீரின் தன்மையை உணர்த்த குடிநீர் விழிப்புணர்வு வாரம் என்ற முகாம் நடத்தப்பட உள்ளது.

பொதுமக்களுக்கு குடிநீரின் தரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தரமற்ற குடிநீரால் பரவக்கூடிய நோய்கள் பற்றி மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக ஒன்றிய அளவில் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெறவுள்ளது.

குடிநீரை பரிசோதனை செய்வதற்குத் தேவையான நீர் தர பரிசோதனைப் பெட்டிகள் குடிநீர் வடிகால் வாரியத்தால் இலவசமாக அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்கப்படுகிறது. இந்தப் பெட்டியை கையாளும் முறைதிருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் விழிப்புணர்வு வாரம் கொண்டாட முடிவு: ஆட்சியர்திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் விழிப்புணர்வு வாரம் கொண்டாட முடிவு: ஆட்சியர்திருவாரூர் மாவட்டத்தில் குடிநீர் விழிப்புணர்வு வாரம் கொண்டாட முடிவு: ஆட்சியர்யை ஊராட்சிக்கு 2 ஆசிரியர்கள் என தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த குடிநீர் பாதுகாப்பு வார முகாமில் மாவட்டத்தில் சுமார் 10,640 நீர் மாதிரிகள் பரிசோதி க்கப்படவுள்ளன. இதேபோல், ஆண்டுக்கு இருமுறை குடிநீர் பாதுகாப்பு வாரம் நடத்தி விவரங்கள் அறிக்கையாக தொகுக்கப்பட்டு குடிநீர் தரம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாற்று நீராதார ஏற்பாடுகள் செய்வதற்கும், புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்துவதற்கும் இந்த குடிநீர் விழிப்புணர்வு வாரம் வழிவகுக்கும் என்றார் மதிவாணன்.

கூட்டத்தில், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராமநாதன், உதவி செயற் பொறியாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment