Friday 6 March 2015

பிளஸ் 2 தேர்வு14,722பேர் எழுதினர்


திருவாரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாணவ, மாணவிகள் 14,722 பேர் பிளஸ் 2 தேர்வை எழுதினர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 31-ம் தே தி வரை நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் 41 தேர்வு மையங்களில் 6,100 மாணவர்கள், 8,622 மாணவிகள் என மொத்தம் 14,722 பேர் தேர்வெழுதினர்.
தேர்வு நியாயமாக முறைகேடுகள் இன்றி நடக்க 10 தேர்வு அறைக்கு 1 பறக்கும் படையினர் வீதம் 100 பறக்கும் படையினர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தவிர முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அறை கண்காணிப்பாளர்கள், நிலையான பறக்கும் படை அலுவலர்கள், கட்டு காப்பாளர்கள், வழித்தட அலுவலர்கள், துறை அலுவலர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை உறுப்பினர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருவாரூர் ஜிஆர்எம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தை மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணி, கோட்டாட்சியர் முத்துமீனாட்சி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment