திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடைந்து வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் தற்போது விண்ணப்பம் அளித்து பெயரை சேர்த்துக்கொள்ளலாம் என ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்கள் பார்வைக்காக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என்றும், பெயர் பாலினம், வயது, உறவுமுறை, கதவிலக்க எண் மற்றும் முகவரி ஆகிய விவரங்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம்.
பெயர் சேர்க்கை மற்றும் விவரங்கள் தவறாக இருப்பின் சேர்க்கை மற்றும் திருத்தங்களுக்கு புதிய சேர்க்கை படிவம் 6, பெயர் நீக்க படிவம் 7, பெயர் மற்றும் ஏனைய விவரங்களை திருத்தம் செய்ய 8, ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 8யு படிவங்களை பயன்படுத்தலாம்.
வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் இடம் பெறதாவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இரட்டைப் பதிவுகள் இருந்தால் தவறாக உள்ள ஒன்றினை நீக்கம் செய்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்கள் பார்வைக்காக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என்றும், பெயர் பாலினம், வயது, உறவுமுறை, கதவிலக்க எண் மற்றும் முகவரி ஆகிய விவரங்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம்.
பெயர் சேர்க்கை மற்றும் விவரங்கள் தவறாக இருப்பின் சேர்க்கை மற்றும் திருத்தங்களுக்கு புதிய சேர்க்கை படிவம் 6, பெயர் நீக்க படிவம் 7, பெயர் மற்றும் ஏனைய விவரங்களை திருத்தம் செய்ய 8, ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 8யு படிவங்களை பயன்படுத்தலாம்.
வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் இடம் பெறதாவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இரட்டைப் பதிவுகள் இருந்தால் தவறாக உள்ள ஒன்றினை நீக்கம் செய்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment