Thursday 5 March 2015

திருவாரூரில் நாளை மார்பக புற்றுநோய் சிகிச்சை முகாம்


திருவாரூரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) உலக மகளிர் தினத்தையொட்டி, அதிமுக மகளிர் அணி சார்பில் மார்பக புற்றுநோய் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.
திருவாரூர் - நாகை சாலை மல்லிகா மகாலில் காலை 9.30 மணிக்கு மார்பக புற்றுநோய் சிகிச்சை முகாம் தொடங்குகிறது. முகாமை அதிமுக மாவட்டச் செயலர் மற்றும் தமிழக உணவு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தலைமையில், மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால், வீட்டுவசதி மற்றும் நகாóபுற
வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் தொடக்கிவைக்கின்றனர்.
முகாமில் அனுபவம் பெற்ற மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.
பரிசோதனையில் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு தேவையான உதவிகள் "அம்மா' மருத்துவ முகாம் மூலம் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment