Sunday 29 March 2015

மத்திய பல்கலைக்கழக கட்டடம் இடிந்து விழுந்தது

Flash News
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக
அலுவலர்கள் குடியிருப்பு கட்டடம்
இடிந்து விழுந்தது. இதில் 5 பேர்
உயிரிழந்திருக்க கூடும் என
அஞ்சப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம்
கங்களாஞ்சேரி
அருகே நாக்குடி கிராமத்தில் உள்ள
மத்திய பல்கலைக்கழக அலுவலர்கள்
குடியிருப்பு வளாகத்தில் 5 மாடி
புதிய
கட்டட கட்டுமானப் பணி நடந்து
வந்தது.
இதில் இன்று கான்கீர்ட் போடும்
பணி
நடந்த போது கட்டடம் இடிந்து
விழுந்ததில்
5 பேர் உயிரிழந்திருக்கக் கூடும்
என
அஞ்சப்படுகிறது. மேலும் ஒடிசா
மாநிலத்தை சேர்ந்த சமீர் குமார்
ரெட்டி
என்பவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இந்த
விபத்தில் 18பேர் படுகாயம் அடைந்த
நிலையில் திருவாரூர் அரசு
பொது
மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment