Friday 27 March 2015

மேக்கேதாட்டுவில் அணை கட்ட தடை கோரி தமிழகம் வழக்கு



காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வியாழக்கிழமை வழக்கு தாக்கல் செய்தது.

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்காக 2015-16 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கர்நாடக அரசு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது.

மேக்கேதாட்டுவில் இரண்டு அணைகள் கட்டும் திட்டத்தைச் செயல்படுத்துவதைத் தடுக்கக் கோரி கடந்த 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

தற்போது அணை கட்டும் திட்டத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வியாழக்கிழமை கூடுதல் மனுவைத் தாக்கல் செய்துள்ளது

No comments:

Post a Comment