Tuesday 10 March 2015

தமிழகம் வாக்காளர் அட்டைக்கும், ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க ஒரே இடத்தில் சிறப்பு முகாம்: சந்தீப் சக்சேனா தகவல்

வாக்காளர் அடையாள அட்டைக்கும், ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க ஒரே இடத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சந்தீப் சக்சேனா பேசினார். ''வாக்காளர் அடையாள அட்டைக்கும், ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க ஒரே இடத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.இதற்காக இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் நடத்தப்படும்.இதற்கான பயிற்சிக் கையேடுகள் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம் தொடர்பாக மார்ச் 13 -ல் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளிக் காட்சி மூலம் உரையாட இருக்கிறேன். இதைத் தொடர்ந்து மார்ச் 19-ல் மாவட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.'' என சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.

No comments:

Post a Comment