Friday 27 March 2015

ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முழு சந்திரகிரகணம்






வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி முழு சந்திரகிரகணம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மதியம் 3.45 மணிக்கு துவங்கும் சந்திரகிரகணம் இரவு 7.15 மணி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: சந்திரகிரகணம் என்பது சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஒரே வரிசையில் வரும் போது ஏற்படுவதாகும்.




 இந்த சந்திரகிரகணத்தை இந்தியாவின் வடகிழக்கு மாநிலம், மற்றும் அந்தமான் தீவுகளில் முழுமையாக பார்க்கலாம் மேலும் இந்தியாவின் ஐஸ்வால், திப்ரூகார்க், இம்பால், இடாநகர், கோஹிமா, போர்ட் பிளேர், ஆகிய இடங்கிளில் முழுமையாக தெரியும்,




 உலகளவில் கிழக்கு ஆசிய பகுதி, ஆஸ்திரேலியா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்காவின் மேற்குபகுதி, அண்டார்டிகா, இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய இடங்களில் முழுமையாகவும், கிரகணத்தின் இறுதி கட்டத்தை அர்ஜெண்டினா, பிரேசிலின் மேற்குபகுதி, அமெரிக்கா, கனடா நாடுகளின் கிழக்கு பகுதிகளில் காணலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment