Thursday 19 March 2015

திருவாரூரில் பாதுகாப்பு ஒத்திகை

கடலோரரக் கிராமங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய நடத்தப்படும் "ஆம்லா ஒத்திகை' , திருவாரூரில் புதன்கிழமை தொடங்கியது.


கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும், தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும் வகையிலும், இந்த ஒத்திகை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் புதன் மற்றும் வியாழக்கிழமையில், திருவாரூர் மாவட்டங்களில் ஒத்திகை ஆம்லா நடைபெறுகிறது


திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை கடல் பகுதியில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு காவல்துறையினர் சென்று ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். தவிர திருவாரூர் தியாகராஜர் கோயில், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில், முத்துப்பேட்டை தர்கா, தேவாலயம் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து, ரயில் நிலையம், நீதிமன்ற வளாகம், ஓஎன்ஜிசி நிறுவனம், மின் நிறுவனம், எரிவாயு சேமிப்பு கிடங்கு என முக்கிய இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர். மாவட்டத்தில் 3 டிஎஸ்பிக்கள், 10 ஆய்வாளர்கள், 250 காவல்துறையினர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment