Saturday 31 January 2015

கேஸ் தட்டுப்பாடு அபாயம்: மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


கேஸ் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள், மற்றும் லாரி உரிமையாளர்களை அழைத்து சுமூக திர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்
தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று 31/01/2015 திருவாரூர் அருகே மஞ்சக்குடியில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், டேங்கர் லாரி வாடகை நிர்ணய ஒப்பந்தம் முடிந்து 3 மாதங்கள் ஆகிறது.
புதிய வாடகை ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதனால் தற்போது வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்கள் கேஸ் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. எனவே எண்ணெய் நிறுவனங்கள், லாரி உரிமையாளர்களை அழைத்து சுமூக திர்வு காண வேண்டும்.
மத்திய அரசு சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது. இந்திய அரசியல் முகஉரையில், மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற வார்த்தையை யாராலும் அழிக்க முடியாது. கருப்பு பண மீட்பு விவகாரத்தில் பாஜக சரியான தகவலை சொல்ல மறுக்கிறது. தமிழகத்தில் முதல்வர் மாறினால் மாற்றம் நிகழும் என்பது எதார்த்தம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மக்கள் எண்ணப்படி அவர் நடக்க வேண்டும் என்றார

No comments:

Post a Comment