Wednesday 27 April 2016

மிஸ்டு கால்' கொடுத்தால் ரயில் சேவைகளின் விவரங்களை அறியலாம்


"மிஸ்டு கால்' கொடுத்தால், புறநகர் ரயில்களின் தாமதங்கள், திடீர் ரத்து ஆகியவற்றை பயணிகள் அறிந்து கொள்ளும் திட்டத்தை மேற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
 அன்றாடப் பயணங்களுக்கு, போக்குவரத்து நெரிசல், கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் பேருந்துகளைக் காட்டிலும் பொதுமக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.
 மேலும், பெரும்பாலான நகரங்களில் தாங்கள் பணிபுரியும் அலுவலகங்கள் நீண்ட தூரத்தில் இருந்து அலுப்பு தெரியாமல் பயணம் செய்ய ரயில் போக்குவரத்தையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
 அவ்வாறு புறநகர் ரயில்களுக்காக காத்திருக்கும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் ரயில்கள் வரவில்லையென்றால் ரயில் பழுது, சேவை திடீர் ரத்து, தாமதம் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியாமல், அவசர கதியில் பேருந்துகளையோ அல்லது கிடைத்த வாகனங்களிலோ தங்கள் பணியிடங்களுக்குச் செல்ல நேரிடுகிறது.
 இதைத் தடுக்க மேற்கு ரயில்வே புதிய திட்டத்தை திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது.
 இதற்கு, புறநகர் ரயில் பயணிகள் 1800 212 4502 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும். அப்போது அந்த அழைப்பு தானாகவே துண்டிக்கப்படும்.
 இதையடுத்து, எந்த செல்லிடப்பேசி எண்ணில் இருந்து பயணிகள் அழைத்தனரோ அந்த எண்ணுக்கு, ரயில் சேவைகள் மற்றும் அதன் நிலவரங்கள் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
 இந்தத் திட்டத்துக்கு பயணிகள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்தது.

No comments:

Post a Comment