Saturday 16 April 2016

திருவாரூரில் இருந்து பொதுவினியோக திட்டத்துக்கு 1,200 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது


ரல் 16,2016, 4:30 AM IST
திருவாரூரில் இருந்து சேலத்திற்கு பொது வினியோக திட்டத்திற்காக சரக்கு ரெயிலில் 1,200 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

1,200 டன் அரிசி

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா சாகுபடி பணிகள் முடிவடைந்தது. விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் பல மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் திருவாரூர் மாவட்டத்தில் அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு நெல் அனுப்பி வைக்கப்பட்டு அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் பொது வினியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து நேற்று 1,200 டன் அரிசி மூட்டைகள் 110 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 21 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 1,200 டன் பொதுரக அரிசி மூட்டைகள் திருவாரூரில் இருந்து சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

No comments:

Post a Comment