Saturday 30 April 2016

திருவாரூர் மாவட்ட நான்கு தொகுதிகளில் 120 வேட்பு மனுக்கள் தாக்கல்:இன்று பரிசீலனை


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் 86 வேட்பாளர்கள் 120 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக மக்கள் முன்னேற்றக்கழக வடக்கு மாவட்ட செயலாளர் சு. கணேசன் (37), சுயேச்சையாக வடகரையைச் சேர்ந்த எஸ்.ராஜேந்திரன், மடப்புரம் த. செல்வராஜ் (52), சென்னை பட்டாபிராமபுரம் மீனாட்சிசுந்தரம் (34) ஆகியோர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
திருத்துறைப்பூண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம்குமாரிடம் சுயேச்சையாக திருக்களாரைச் சேர்ந்த பசுபதி (42), திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த முருகேசன் (50) ஆகியோர் வெள்ளிக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகனிடம் வெள்ளிக்கிழமை சுயேச்சை வேட்பாளர்கள் மோகன், மூர்த்தி, ஆறுமுகம், வெங்கட சுப்பிரமணியன், விஜயன், கலைவேந்தன், பெர்னாட்ஷா ஆகிய 7 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வசுரபியிடம் பாமக வேட்பாளர் பாலசுப்பிரமணியன், அக்கட்சியின் மாற்று வேட்பாளர் கங்காதரன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ஜேஆர்எஸ்.பாண்டியன், பகுஜன் சமாஜ்வாதி வேட்பாளர் கலையரசன், சுயேச்சை வேட்பாளர்களான மாரிமுத்து, சம்பத், ராஜா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் இறுதி நாள் வரை அதிமுக 8, திமுக 6, காங். 2, பாஜ 6, பிஎஸ்பி 3, இந்தியக் கம்யூ. 4, மார்க்சிஸ்ட் 2, தேமுதிக 2, தமிழக தேவேந்திர குல மக்கள் எழுச்சி இயக்கம் 1, நாம் தமிழர் கட்சி 8, அன்பு உதயம் கட்சி 1, பாமக 8, இந்திய ஜனதா 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 3, யூத் அண்டு ஸ்டூடண்ட் பார்ட்டி 2, பார்வர்டு பிளாக் 1, மக்கள் மனது கட்சி 1 மற்றும் சுயேச்சை 26 என மொத்தம் 86 பேர் 120 மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் இன்று (சனிக்கிழமை) பரிசீலனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment