Sunday 10 April 2016

tiruvarur :தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம்

திருவாரூர் அதிமுக வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் சனிக்கிழமை பிரசாரத்தைத் தொடக்கினார்.




திருவாரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டு பிரசாரம் தொடங்கப்பட்டது.
திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
இதையொட்டி திருவாரூர் பனகல் சாலையில் சட்டப் பேரவைத் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. அதைத் தொடாóந்து அங்கிருந்து வேட்பாளாó பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
பனகல்சாலை, நேதாஜிசாலை, கடைவீதி, பேருந்து நிலையம் வரை மக்களைச் சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
இதில் நகர செயலர் ஆர்.டி. மூர்த்தி, ஒன்றியச் செயலர் பி.கே.யூ. மணிகண்டன், நகராட்சித் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#tnelections2016 #ac168thiruvarur #tiruvarur

No comments:

Post a Comment