Tuesday 12 April 2016

தேர்தல் விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கம் தொடக்கம்

திருவாரூர் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை தேர்தல் விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கத்தை மத்திய தேர்தல் விழிப்புணர்வுப் பார்வையாளர் விஜய்குமார் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், சட்டப்பேரவைத் தேர்தல் விழிப்புணர்வு விடியோ படக்காட்சி திரையிடப்பட்டிருந்ததைப் பார்வையிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திரையிடப்பட வேண்டும் என அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் தேர்தல் விழிப்புணர்வுக் கலைநிகழ்ச்சி மற்றும் பாரத் கல்விக் குழுமத்தின் சார்பில் மாணவர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு சாகச நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார்.
பேருந்து நிலையத்தில் மாணவ, மாணவிகள், பொதுமக்களிடம் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென்பதை அறிவுறுத்தும் விதமாக கையெழுத்து இயக்கத்தை முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் நகராட்சி பிரிவு அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையத்தைப் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்பர்வுத் துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி மே 16 ஆம் தேதி கட்டாயம் வாக்களிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment