Friday 29 April 2016

திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. - பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட 29 பேர் மனு தாக்கல்













திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. - பா.ஜனதா வேட்பாளர்கள் உள்பட நேற்று ஒரே நாளில் 29 பேர் மனு தாக்கல் செய்தனர். 

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பன்னீர்செல்வம் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துமீனாட்சியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக விஜயகுமாரி மனுதாக்கல் செய்தார்.பா.ஜனதா கட்சி வேட்பாளர் ரெங்கதாஸ், இவருக்கு மாற்று வேட்பாளராக பிரமோத்ராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தென்றல் சந்திரசேகரன், இவருக்கு மாற்று வேட்பாளர் கந்தன் என மொத்தம் 6 பேர் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நன்னிலம்

அதேபோல நன்னிலம் தொகுதியில் போட்டுயிடுவதற்காக அ.தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான ஆர்.காமராஜ் தேர்தல் நடத்தும் அலுவலர் அசோகனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இவருக்கு மாற்று வேட்பாளராக சுவாதிகோபால், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளராக சரவணன், இவருக்கு மாற்று வேட்பாளராக ராஜேந்திரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அன்புச்செல்வன், மாற்று வேட்பாளராக சாமிநாதன், பா.ம.க. வேட்பாளராக இளவரசன், மாற்று வேட்பாளராக ராஜாராமன், பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர் பெர்னாட்ஷா, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் முருகவேல், சுயேச்சை வேட்பாளர் குமார் என மொத்தம் 11 பேர் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மன்னார்குடி

மன்னார்குடி தொகுதியில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜ் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வசுரபியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக வக்கீல் சாமிநாதன், தே.மு.தி.க. வேட்பாளர் முருகையன்பாபு, மாற்று வேட்பாளர் கென்னடி, சுயேச்சை வேட்பாளர் சுந்தர் என மொத்தம் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க. வேட்பாளர் உமாமகேஸ்வரிகிருஷ்ணமூர்த்தி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரேம்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இவருக்கு மாற்று வேட்பாளராக பாலதண்டாயுதம், பா.ம.க. வேட்பாளராக ராஜமோகன், மாற்று வேட்பாளராக வெண்ணிலா, நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளராக சரவணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக தங்க.அய்யப்பன், சுயேச்சை வேட்பாளர் புகழேந்தி என மொத்தம் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 29 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

No comments:

Post a Comment