Friday 10 July 2015

ஆபாச இணையதளங்களை முடக்க நடவடிக்கை: மத்திய அரசு

ஆபாச இணையதளப் பக்கங்களை முடக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மத்திய அரசு உறுதியளித்தது.
 ஆபாச இணையதளப் பக்கங்களை முடக்க உத்தரவிடக் கோரி, இந்தூரைச் சேர்ந்த கமலேஷ் வஸ்வானி என்ற வழக்குரைஞர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 
 மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "ஆபாச இணையதளப் பக்கங்களை முடக்குவதற்கான சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த போதிலும், அதில் மத்திய அரசு அதிக அக்கறை கொள்ளவில்லை' என்று வாதிட்டார்.
 இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிட்டர் ஜெனரல், "ஆபாச வலைதளப் பக்கங்களை முடக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்' என்று உறுதியளித்தார். 

No comments:

Post a Comment