Sunday 19 July 2015

புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்




திருவாரூரில் புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

பஸ் போக்குவரத்து

திருவாரூர்¢ ஹவுசிங் யூனிட் - கொடிக்கால்பாளையம் இடையே புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து தொடக்க விழா நேற்று பஸ் நிலையத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதிவாணன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், போக்குவரத்து கழக பொது மேலாளர் ஸ்டீபன், துணை மேலாளர் ராஜா, கோட்ட மேலாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வளர்ச்சி பாதை

ஏழை-எளிய மக்களின் நலன் காக்கும் வகையிலான திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தற்போது மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டு இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் அரசு திட்டங்களால் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் திருவாரூர் நகரசபை தலைவர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் மூர்த்தி, மணிகண்டன், கலியபெருமாள், பன்னீர்செல்வம், முருகானந்தம், முத்துமாணிக்கம், ஒன்றியக்குழு தலைவர் மலர்மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை மேலாளர் ஜெய்சங்கர் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment