Thursday 23 July 2015

உலகின் மிகப் பழைய குரான்: பிரிட்டன் பல்கலை.யில் கண்டெடுப்பு


பிரிட்டனின் பர்மிங்ஹம் பல்கலைகழத்தில் உள்ள குரானின் பக்கங்கள், 1,370 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
 ஏறத்தாழ முகமது நபி வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்டதாகக் கூறப்படும், தோல் காகிதத்தாலான அவை, உலகின் மிகப் பழைய குரான்களில் ஒன்று என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
 ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழத்தில் "ரேடியோ கார்பன்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது.
 அந்தத் தோல் காகிகங்களிலுள்ள குரான் வசனங்கள் கிபி. 568 முதல் 645-ஆம் ஆண்டுக்குள் எழுதப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
 எனவே, கி.பி. 570 முதல் 632 வரை வாழ்ந்ததாகக் கருதப்படும் முகமது முகமது நபிகளின் காலத்தில் அந்தக் குரான் எழுதப்பட்டிருக்கலாம் எனவும் அவர்கள் கூறினர்.
 இந்த குரான் பக்கங்கள், பர்மிங்ஹம் பல்கலைக்கழகத்தில் 1,600-ஆவது ஆண்டைச் சேர்ந்த வேறு குரான் பக்கங்களுடன் இதுவரை தவறுதலாக இணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்செயலாக இந்தப் பக்கங்களை நவீன ஆய்வுக்கு உள்படுத்தியபோது அது உலகின் மிகப் பழைய குரான் பக்கங்களில் ஒன்று என்பது தெரிய வந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment