Monday 13 July 2015

திருவாரூர் ஜூலை 14 மின் தடை


திருவாரூர், நன்னிலம், கொரடாச்சேரி ஆகியப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து திருவாரூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பி. சந்திரசேகரன்
வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. திருவாரூர் நகர், விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகந்தனூர், திருப்பயத்தாங்குடி, மாவூர், அடியக்கமங்கலம், ஈபி காலனி, சிதம்பரம் நகர், பிலாவடிமூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்ளாம்புலியூர், புதுப்பத்தூர், நீலப்படி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல, நன்னிலம், நல்லமாங்குடி, சன்னாநல்லூர், ஏனங்குடி, ஆண்டிப்பந்தல், குவளைக்கால், கங்களாஞ்சேரி, மாப்பிள்ளைக்குப்பம், ஆனைக்குப்பம், தட்டாத்திமூலை, மூங்கில்குடி, கீழ்குடி, சலிப்பேரி, கொரடாச்சேரி, கண்கொடுத்தவணிதம், கமுகக்குடி, செல்லூர் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

No comments:

Post a Comment