Monday 27 July 2015

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீடிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 1 முதல் எஸ்எஸ்எல்சி வரை படிக்கும் கிறிஸ்துவர், இஸ்ஸாமியர், சீக்கியர், புத்த மதத்தினர் பார்சி மற்றும் ஜெயின் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 1 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ளவர்கள் கல்வி உதவித்தொகைக்கு புதிதாக மற்றும் புதுப்பித்தல் செய்பவர்கள் ஆக. 15ஆம் தேதி வரையும், கல்வி நிறுவனங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆக.31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல 9 முதல் எஸ்எஸ்எல்சி வரையுள்ளவர்கள் இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் ஆக. 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  

No comments:

Post a Comment