Wednesday 15 July 2015

சிறுபான்மையினர் விவரங்களை கோருகிறது மத்திய அரசு


மத்திய அரசுத் துறைகளில் பணியமர்த்தப்பட்டுள்ள சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களின் விவரங்களை அனைத்து துறைகளிடமும் பணியாளர் நலத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. சிறுபான்மையினர் நலன் தொடர்பான பிரதமரின் 15 அம்சத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது.
 இதுகுறித்து மத்தியப் பணியாளர் நலத் துறை அமைச்சகம் விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்ட சிறுபான்மை சமூக மக்களின் எண்ணிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை, குறிப்பிட்ட துறையில் சிறுபான்மையின மக்கள் பணியமர்த்தப்படும் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட குறைந்து காணப்பட்டால் அதற்கான காரணத்தையும் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும்.
 இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்ஸிகள் ஆகிய 5 பிரிவுகளுடன் ஜைன (சமண) சமூகத்தினரையும் இணைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment