Tuesday 14 July 2015

பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு கலெக்டர் மதிவாணன் தகவல்


பிளஸ்-2 மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் மதிவாணன் கூறினார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதிவாணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் நாளை (புதன்கிழமை) முதல் பள்ளிகளில் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி சான்றிதழை பெறும் பிளஸ்-2 மாணவர்களுக்காக அந்தந்த பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு அலுவலக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பிளஸ்-2 மாணவர்கள் சான்றிதழ் பெற வரும்போது எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை பதிவு செய்ததற்கான வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, செல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகியவற்றுடன் பள்ளிக்கு வர வேண்டும்.

அடையாள அட்டை

இணைய தளம் மூலமாக மாணவர் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் அடையாள அட்டை வழங்கப்படும். நாளை முதல் 15 நாட்களுக்கு இப்பணி பள்ளிகளில் நடைபெறும். இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment