Monday 29 February 2016

திருவாரூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் தேர்வை 13 ஆயிரத்து 624 பேர் எழுதினர்


திருவாரூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலருக்கான தேர்வை 13 ஆயிரத்து 624 பேர் எழுதினர்.

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கிராம நிர்வாக அலுவலருக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்காக திருவாரூர் மாவட்டத்தில் 43 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் 60 தேர்வு அறைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 மாவட்டம் முழுவதும் 17 ஆயிரத்து 560 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 13 ஆயிரத்து 624 பேர் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 936 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் 60 முதன்மை கண்காணிப்பாளர்களும், 878 அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். 11 பறக்கும் படையினரும், 60 ஆய்வாளர்களும், 43 வீடியோகிராபர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment