Monday 8 February 2016

முத்துப்பேட்டையில் கந்தூரி விழா:பிப். 19-இல் உள்ளூர் விடுமுறை


முத்துப்பேட்டை கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவையொட்டி, பிப். 19 ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முத்துப்பேட்டை கந்தூரி சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதையொட்டி மாவட்டத்துக்கு பிப். 19 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக திருவாரூர் மாவட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பிப். 27 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
உள்ளூர் விடுமுறையான பிப். 19 இல் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் கருவூலகங்களும், சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment