Saturday 27 February 2016

விவசாய நிலங்கள் குறைந்துள்ளன: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

நாட்டில் உள்ள விவசாய நிலங்களின் அளவு முன்பைக் காட்டிலும் தற்போது குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் வெள்ளிக்கிழமை பதிலளித்துப் பேசியதாவது:
 இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களின் அளவு கடந்த 2005-06-ஆம் நிதியாண்டில் 18.27 கோடி ஹெக்டேராக இருந்தது. அந்த அளவு 2012-13-இல் 18.2 கோடி ஹெக்டேராகக் குறைந்தது.
 அதாவது, 7 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வேறு சில பயன்பாட்டுக்காக மாற்றப்பட்டுள்ளன. நகரமயமாக்கல், சாலைத் திட்டங்கள், வீட்டு வசதி மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைத்தல் உள்ளிட்ட காரணங்களால் விவசாய நிலங்களின் அளவு குறைந்துள்ளது.
 அதேவேளையில் தற்போது உள்ள அளவு மேலும் குறையாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலப்பரப்பு குறைந்தபோதிலும் வேளாண் உற்பத்தி முன்பை விட அதிகரித்துள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment