Thursday 18 February 2016

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்


திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியலை  செம்மைப்படுத்துவது குறித்து அனைத்துக் கட்சிப்  பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கோட்டாட்சியர் முத்துமீனாட்சி தலைமை வகித்து பேசியது: இந்திய தேர்தல் ஆணைய  அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி பிப். 15 முதல் 29 உம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர், ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள், ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண் கொண்டு ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் உள்ள பதிவுகளை நீக்கம் செய்வது ஆகிய பணிகள் நடைபெறுகிறது.
எனவே, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு, ஒத்துழைக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார் முத்துமீனாட்சி

No comments:

Post a Comment