Friday 12 February 2016

வேதாரண்யம் கூட்டு குடிநீர் பிப்.16, 17-இல் விநியோகம் இருக்காது

திருவாரூர் மாவட்டத்தில் பிப்.16,17 தேதிகளில் வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் இரா. வசந்தகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேதாரண்யம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் பிப்.16, 17 ஆகிய தேதிகளில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் நகராட்சி பகுதி, முத்துப்பேட்டை, தலைஞாயிறு பேரூராட்சி, வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி மற்றும் வேதாரண்யம் ஒன்றிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என்பதால் உள்ளாட்சி நிர்வாகம் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment