Wednesday 10 February 2016

இஸ்லாமிய இளைஞர்கள் கைதில் வெளிப்படைத்தன்மை: பிரதமரிடம் வலியுறுத்தல்


இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் ஜாமா மஸ்ஜித் இமாம் வலியுறுத்தினார்.
 பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜமா மஸ்ஜித் இமாம் சையது அகமது புகாரி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். தில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் சுமார் அரை மணிநேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் பலர் கைது செய்யப்படுவதை பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் இஸ்லாமிய மதத்தினர் குறிவைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
 பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு இஸ்லாமியர்கள் கைது செய்யப்படும் போது, போலீஸார் உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்பினர் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த வெளிப்படைத்தன்மையை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டேன் என்றார் சையது அகமது புகாரி.

No comments:

Post a Comment