Saturday 13 February 2016

வேலைவாய்ப்பு முகாம் குறித்த ஆய்வுக்கூட்டம்


நன்னிலம் அருகே சொரக்குடியில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 14) நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாம் குறித்து திருவாரூரில் வெள்ளிக்கிழமை ஆட்சியர் எம். மதிவாணன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
நன்னிலம் அருகே சொரக்குடியில் நடைபெறவுள்ள முகாமில் 329 வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று 24,285 பேருக்கு வேலையளிக்கவுள்ளது. 5 முதல் பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டயப் படிப்பு, பி.இ பட்டதாரிகள் பங்கேற்கலாம்.
பொறியியல் பட்டதாரிகள் 1,045 பேர், பட்டதாரிகள் 2,936 பேர், பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு 2,897 பேர், ஐடிஐ தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 2,532 பேர், பள்ளி இறுதி வகுப்பு முடித்தவர்கள் 9,710 பேர், எஸ்எஸ்எல்சிக்கு கீழ் படித்தவர்கள் 5,165 பேர் தேர்வு செய்யவுள்ளனர். தவிர திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான பதிவும் செய்யப்படுகிறது.
முகாமுக்கு வந்து செல்ல அனைத்து ஒன்றியங்களிலிருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பங்கேற்பாளர்கள் அசல் சான்றிதழ்கள் எடுத்து வர தேவையில்லை. கல்வி மற்றும் இதரச் சான்றிதழ்களின் 3 நகல்கள் எடுத்து வர வேண்டும். முகாமிடத்தில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. ஜெராக்ஸ் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளன என்றார்.

No comments:

Post a Comment