Friday 27 June 2014

திருவாரூர் நகர போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி




 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
திருவாரூர் நகர போலீஸ் நிலையத்துக்கு புதிய கட் டிடம் கட்டும் பணியை வருவாய் அதிகாரி ஆய்வு செய்தார்.

வாடகை கட்டிடத்தில் போலீஸ் நிலையம்

திருவாரூர் நகர போலீஸ் நிலையம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே கீழவீதியில் உள்ள ஓட்டு கூரை கட்டி டத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. ஓட்டு கூரை கட்டி டத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டதால், அங்கிருந்த ஆவணங்கள், ஆயுதங்களுக்கு போதிய பாதுகாப்பும், இட வசதியும் இல்லை. மேலும் குற்றவாளிகளை விசாரிக்க ஏதுவாக தனியாக அறை வசதி யும் இல்லை. மழை காலங்களில் ஆவணங்கள் பாதிப்புக்கு உள்ளாயின.

தொடர்ந்து பல ஆண்டு களாக வாடகை கட்டிடத் திலேயே இயங்கி வந்ததை யடுத்து நகர போலீஸ் நிலையத் துக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதை யடுத்து இடத்தை தேர்வு செய் யும் பணி கடந்த சில ஆண்டு களாக நடைபெற்று வந்தது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு திருவாரூர் நகர போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் உரிய காலத்தில் இடம் தேர்வு செய்யப்படாததால், அந்த நிதி திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையம் கட்ட பயன்படுத் தப்பட்டது.

முதல்-அமைச்சர் உத்தரவு

இந்த நிலையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு அலுவலகங் களுக்குச் சொந்தமாக புதிய கட்டிடம் கட்ட உத்தரவிட் டார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் மதிவாணன் ஆலோசனையின்படி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ்மகேஷ்குமார் திரு வாரூர் நகர போலீஸ் நிலை யத்துக்கு புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டார். இதில் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள சார் பதிவாளர் அலுவ லகம் அருகே இருந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இதை யடுத்து மாவட்ட வருவாய் அதிகாரி மணிமாறன், தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய் தார். இதைதொடர்ந்து சார் பதிவாளர் அருகே புதிய கட்டி டம் கட்ட முடிவு செய்து, அரசின் ஒப்புதல் பெறப்பட் டது.

பணிகள் தொடக்கம்

புதிய கட்டிடம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத் தை சமப்படுத்தும் பணி பொக்லைன் எந்திரம் உதவியு டன் நடைபெற்றது. இந்த பணியை போலீஸ் துணை சூப்பிரண்டு மதுரை சாமி, நகர போலீஸ் இன்ஸ் பெக்டர் ரமேஷ்குமார் பார் வையிட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட சுமார் 4 ஆயி ரம் சதுர அடி நிலத்தில் திரு வாரூர் நகர போலீஸ் நிலையம், போக்குவரத்து போலீஸ் நிலையம் ஆகியவற் றுக்கான கட்டிடம் புதிதாக கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங் கும் என போலீசார் தெரி வித்தனர்.

No comments:

Post a Comment