Sunday 15 June 2014

திருவாரூர் மாவட்டத்தில் 12,968 பேர் பங்கேற்பு




திருவாரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் 12,968 பேர் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் 48 தேர்வு மையங்களில் 62 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. திருவாரூர், குடவாசல், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் ஆகிய வட்டங்களிலுள்ள தேர்வு மையங்களில் மொத்தம் 16,665 பேர் தேர்வு எழுத அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இதில் 3,697 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 12,968 பேர் தேர்வெழுதினர். திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.


No comments:

Post a Comment