Sunday 6 July 2014

திருவாரூர் மாவட்டத்தில் 7 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

 
திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 7 தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து, முதன்மை கல்வி அதிகாரி நிர்மலா உத்தரவிட்டார்.

பள்ளிகள் ஆய்வு


திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், முத்துப் பேட்டை உள்ளிட்ட பகுதி களில் உரிய அனுமதியின்றி தனியாருக்குச் சொந்தமான மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் செயல்படுவதாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்படி திருவாரூர் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் நிர்மலா மற்றும் அதிகாரிகள் தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 7 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த பள்ளிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் ரத்தான பள்ளிகள்


அதன்படி உரிய அங்கீகாரம் இல்லாமலும், போதி அளவு இட வசதி இல்லாமலும் செயல்பட்டு வந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன் றியம் கூப்பாச்சிக் கோட் டையில் செயல்பட்டு வந்த ரோசஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, கோட்டூர் ஒன்றியம் ஆதிச்சபுரம் நேரு காமராஜ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, திருவாரூர் விஜயபுரம் பி.ஆர்.எம்.கே. மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, நன்னிலம் ஒன்றியம் நல்லுமாங்குடி தங்கம் மழலை யர் மற்றும் தொடக்கப்பள்ளி, முத்துப்பேட்டை கரையன் காடு இந்தியன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, திருத்துறைப்பூண்டி ஒன்றியம் குரும்பல் ஆக்ஸ்போர்டு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி, நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி என்.எம்.ஜி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஆகிய 7 தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து முதன்மை கல்வி அலுவலர் நிர்மலா உத்தரவிட் டார்.

வேறு பள்ளிகளில் சேர்க்க உத்தரவு

அங்கீகாரம் ரத்து செய்யப் பட்ட பள்ளிகளில் படித்து வந்த மாணவ, மாண விகளை அருகாமையில் உள்ள வேறு பள்ளிகளில் சேர்க்க நடவடிக் கை எடுக்கும்படியும், சம்பந்தப் பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டு இருப்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment