Monday 17 March 2014

India Votes 2014 :என்.ஆர்.ஐ.,களில் ஓட்டுரிமை

ஏப்ரல் மாதம் இந்திய பார்லி., தேர்தல் துவங்கவுள்ள நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு ஓட்டுரிமை வழங்க வேண்டும் என்றும், வெளிநாடுகளில் இருந்தபடியே ஓட்டளிக்க வாய்ப்புகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.
இந்த வாய்ப்பு கிடைக்கும்போது பலரும் மகிழ்ச்சி அடைய மத்திய அரசிடம் கேட்டும் பயன் இல்லாததால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு போடப்பட்டுள்ளது. இந்த மனுவை விரைந்து விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது; 2010ல் திருத்தப்பட்ட மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் செக்ஷன் ( 20 ஏ) யின்படி ஆர்ட்டிக்கிள் 14 படி சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற கருத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இதன் அடிப்படையில் உரிமை வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் வாழும் நபர்கள் போலவே வெளிநாடு வாழ் இந்தியர்கள் மதிக்கப்பட வேண்டும். இவர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெறாதவர்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் பரவலாக மொத்தம் ஒரு கோடியே 37 ஆயிரத்து 761 பேர் ( 2012 வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அறிக்கை) வசித்து வருகின்றனர். இதில் 11 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள்.


என்.ஆர்.ஐ.,களில் ஓட்டுரிமை பதிந்தவர்களும், பதியாதவர்களும் அடங்குவர். இவர்கள் வெளிநாட்டில் இருந்த படியே இந்திய பார்லி., தேர்தலில் ஓட்டளிக்க வழிவகை செய்ய வேண்டும். பதியாதவர்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்களது உரிமை போற்றப்படும். இவ்வாறு கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment