Friday 28 March 2014

இந்தியா 2014 மக்களவை தேர்தல்

 
நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ் நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவையில் இருக்கும் ஒரே தொகுதிக்கு வரும் 24/04/2014 அன்று வாக்குபதிவு நடைபெற உள்ளது .இதில் தேசிய அரசியல் பேச வேண்டிய தேர்தலை நகராட்சி தேர்தல் மாதிரி தமிழ் நாட்டில் நடக்கிறது .காரணம் தனிநபர் அரசியல் மேல்லொங்கி காணபடுகிறது .

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் உள்ள ஷரத்பவாரின்  தேசியவாத காங்கிரஸ் ,பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி , இந்தியன் யூனியன்  முஸ்லிம் லீக் ,கேரளா காங்கிரஸ் கட்சி ,ராஷ்ட்ரிய லோக் தளம் என இப்பொது அமைச்சரவையில் இருக்கிறார்கள் .இதை தவிர திராவிட முன்னேற்ற கழகம் ,திரினாமுல் காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியன இடையில் ஆதரவை விலக்கி கொண்டன .

என்றாலும்  5 ஆண்டுகளை நிறைவு செய்து 16ம் மக்களவைக்கு 2014 ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளத்தால் நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது . டி வி அல்லது செய்தித்தாள்  அல்லது இணைய வழி சமூக தளங்களில் நாட்டில் நடக்கும் கூட்டணி மாற்றம் ,தலைவர்களின் பேச்சுக்கள் ,தொகுதி நிலவரம் என மக்கள்  ஊற்று பார்க்கபடுகிறது .

மக்கள் அடுத்து யார் அல்லது எந்த கூட்டணியை ஆட்சி யில் அமர வைக்க போகிறார்கள் என்பது தான் நம் அனைவரின் பேச்சாக இருக்கிறது.இப்போ நம் ஊடங்கள் பார்வையில் பாரதீய ஜனதா கட்சி தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி
அடுத்ததாக முலாயம் சிங் யாதவ்  சமாஜ்வாடி கட்சி , இடது சாரிகள் ,மாயாவதி பகுஜன் சமாஜ் கட்சி ,ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா முழுவதும் போட்டியை தயார் படுத்திவருகிறது

இது மார்ச் மாத கணிப்பு தான்







NDTV யின் கருத்து கணிப்பு 14/03/2014 அன்று வெளியானது



 
15 வது மக்களவையில் உறுப்பினர் தொகுதி நிதியை 100% செலவு செய்த எம் பி கள் 
 



 
 
 
நாளை 29/03/2014 சனிக்கிழமை காலை 11மணி முதல் நாகை தொகுதி 
வேட்புமனு தாக்கல் துவக்குகிறது . இறுதிநாள் 05/04/2014.
வேட்பாளர்கள் செலவு கணக்கு துவக்குகிறது .
 
 
உண்மையாகவே எந்த ஒரு கட்சிக்கோ கூட்டணிக்கோ 272 இடங்கள் பெறும் நிலையில் இல்லை என்பது தான் தற்போதைய நிலைமை .
மோடி அலையும் இல்லை ராகுல் அலையும் இல்லை தெளிவான முடிவை அறிவிக்க மக்கள் தயார் ஆகி வருகிறார்கள் .
 
இப்போது நடைபெற உள்ளது நாடாளுமன்ற தேர்தல் என்பதை கருதி மக்களை தயார் படுத்த வேண்டும் .யார் ஆட்சி செய்யவேண்டும் என்பதை விட யார் ஆட்சி செய்ய விட கூடாது என்றும் பிரச்சாரம் அமையவேண்டும் .இனி முடிவு மக்கள் இடம் மட்டுமே உள்ளது .தெரு சண்டைகள்  வேண்டாம் கொள்கை பிரச்சாரம் செய்யுங்கள்
 

No comments:

Post a Comment