Friday 29 July 2016

வரப்போகிறது இந்தியாவிற்கு இ-பாஸ்போர்ட்!

லோக் சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நாட்டின் வெளிவுறவுத் துறை அமைச்சர் வி்.கே.சிங் அளித்த பதிலில், ''இ-பாஸ்போர்ட்டை நம் நாட்டில் செயல்படுத்தும் வேலை நடந்து கொண்டு இருக்கிறது'' என்றார்.
இ-பாஸ்போர்ட் நம்மை பற்றிய தகவல் சேமித்து வைக்கும் பெட்டகம் போல செயல்படும். போலி பாஸ்போர்ட்டுகளிடம் இருந்து விடுபெற இது உதவும்.
இ-பாஸ்போர்ட்டுடன் ஒரு எலக்ட்ரானிக் சிப் இணைக்கப்பட்டு அதில் நம் பாஸ்போர்ட்டில் அச்சிட வேண்டிய அனைத்து தகவல்களும் சேமிக்கப்பட்டு இருக்கும். இதை ஸ்கேன் செய்தால் போதும், நம்மை பற்றிய அனைத்து தகவல்களையும் இது கொடுக்கும்.
மிக விரைவில் குடிமக்களுக்கு இதை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது, இந்திய அரசாங்கம். இதற்கான எலக்ட்ரானிக் சிப்களை தயாரிக்க (ISP) இந்தியா செக்யூரிட்டி பிரஸ்க்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அறுபது நாடுகளுக்கு மேல் செயல்பாட்டிற்கு வந்த நிலையில் இப்பொழுது இ-பாஸ்போர்ட் இந்தியாவிற்கும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment