Wednesday 17 September 2014

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை



திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற இயற்கை இடார்பாடுகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலார்களுக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது:

இயற்கை இடார்பாடுகளை எதிர்கொள்ள அக். 1-ம் தேதி முதல் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வெüர்ளக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளும் வகையில் இலவச தொலைபேசி எண் 1077 கொடுக்கப்படவுள்ளது. இந்த வசதியை மக்கள் பயன்படுத்திக்கொண்டு இயற்கை இடர்பாடுகள் குறித்தத் தகவல்களை தெரிவித்து பயன்பெறலாம் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பு. மணிமாறன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ். மாலா உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment