Tuesday 27 September 2016

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 75 பேர் வேட்பு மனு தாக்கல்

திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பதவிக்கான உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17, 19–ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. மாவட்டத்தில் நேரடியாக 4,020 பதவிகளுக்கும், மறைமுகமாக 474 பதவிகளுக்கும் என மொத்தம் 4,494 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், நகராட்சி உறுப்பினர், பேரூராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இதில் திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 74 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஊராட்சி தலைவர் பதவிக்கு திருத்துறைப்பூண்டி பகுதியில் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். மொத்தத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 75 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment