Saturday 17 September 2016

தமிழகத்தில் நேற்று இரவு எவ்வளவு மழை பெய்திருக்கிறது தெரியுமா?

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
வியாழக்கிழமை இரவும், சென்னையில் கன மழை பெய்தது. அதைப் போலவே, வெள்ளிக்கிழமை இரவும் மழை கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்தது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.
தமிழகத்தில் அதிகபட்சமாக மகாபலிபுரம், வடக்கு சென்னை, செம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழையும், டிஜிபி ஆபிஸ் மற்றும் சென்னையின் பிற பகுதிகளில் 5 செ.மீ. மழையும் பதிவானது.
திருவள்ளூர், கோலப்பாக்கம், காட்டுக்குப்பம், புழல், எச்விஎஃப் ஆவடி பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment