Friday 23 September 2016

ஜெயலலிதா - எம்.ஜி.ஆர். பெஸ்ட் சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் திருவாரூர் மருத்துவ கல்லூரி நூலகத்திற்கு தொகுப்பு புத்தகங்கள் ஜெயலலிதா வழங்கினார்

ஜெயலலிதா-எம்.ஜி.ஆர். பெஸ்ட் சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் 6 மருத்துவ கல்லூரி நூலகத்திற்கு 10 தொகுப்பு புத்தகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கல்வி கற்க நிதியுதவி

எந்த ஒரு மாணவ, மாணவியும் கல்வி பயில்வதற்கு நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையுடன், தாயுள்ளத்துடனும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை வாயிலாக கல்வி கற்க வசதியில்லாத ஏழை, எளிய மாணவ - மாணவிகளுக்கு கல்வி கற்பதற்காக நிதியுதவி வழங்கி வருகிறார்.

அந்த வகையில், அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் நமது எம்.ஜி.ஆர். பெஸ்ட் சேரிடபிள் டிரஸ்ட் மூலமாக 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 தொகுப்பு எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பிற்கான புத்தகங்களும் மற்றும் புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடபிள் டிரஸ்ட் மூலமாக 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 தொகுப்பு எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பிற்கான புத்தகங்களையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.

10 தொகுப்பு புத்தகங்கள்

அதன்படி, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஈ.எஸ்.ஐ.எஸ். மருத்துவமனை, சென்னை, தமிழ்நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி நூலகங்களின் பயன்பாட்டிற்காக 4 ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பிற்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அடங்கிய 10 தொகுப்பு புத்தகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார்.

No comments:

Post a Comment