Friday 9 September 2016

ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

சரக்கு மற்றும் சேவை வரி அரசியல் அமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்தார். 

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேடி நடைமுறைப்படுத்தப்படும் முனைப்புடன் கொண்டு வரப்பட்ட நாட்டின் மிகப்பெரிய மறைமுக வரி விதிப்பு முறை மாற்றத்திற்கு தற்போது பிரணாப் ஒப்புதல் அளித்துள்ளார். 

நாட்டின் மறைமுக வரிகளை ஒருமுனைப்படுத்தும் நோக்கத்தில் மத்திய, மாநில வரிகளில் பெரும்பாலானவற்றை ஜிஎஸ்டி தனக்குள் கொண்டு வருகிறது, மதிப்புக்கூட்டு வரி, கலால் வரி, சேவை வரி, மத்திய விற்பனை வரி, கூடுதல் சுங்கத் தீர்வை, சிறப்பு சுங்கத்தீர்வை ஆகியவை ஜிஎஸ்டிக்குள் அடக்கப்படும். 

அரசமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு 50% மாநில சட்டப்பேரவைகளில் ஒப்புதல் பெறுவது அவசியம். இந்நிலையில் பாஜக ஆளும் அசாம் முதலில் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஒப்புதல் தெரிவிக்க இதுவரை 19 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்ததையடுத்து பிரணாப் முகர்ஜி ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டது. 

அசாம் தவிர, பிஹார், ஜார்கண்ட், சட்டிஸ்கர், இமாச்சல் பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், டெல்லி, நாகாலாந்து, மகாராஷ்டிரா, ஹரியாணா, சிக்கிம், மிஜோரம், தெலுங்கானா, கோவா, ஒடிசா, ராஜஸ்தான், அருணாச்சல், மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. 

தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்து விட்ட நிலையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கவனத்திற்கு இதனை மத்திய அரசு கொண்டு செல்லும். இந்த கவுன்சில் வரி விதிப்பு விகிதத்தை முடிவு செய்யும். இந்த கவுன்சிலுக்கு அருண் ஜேட்லி தலைவர், மாநில நிதியமைச்சர்கள் குழுவின் அங்கத்தினர்களாவர்.

No comments:

Post a Comment