Wednesday 21 September 2016

திருவாரூர், நீடாமங்கலத்தில் இருந்து பொதுவினியோக திட்டத்துக்கு 2,700 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது

திருவாரூர், நீடாமங்கலத்தில் இருந்து பொது வினியோக திட்டத்துக்கு 2,700 டன் அரிசி சரக்கு ரெயிலில் தூத்துக்குடி, வேலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரிசி 


திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அரவை செய்யப்பட்டு, அரிசி மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பொதுவினியோக திட்டத்துக்காக பல மாவட்டங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்று திருவாரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து அரிசி மூட்டைகள் 144 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர், சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர்.

இதைத்தொடர்ந்து 29 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 1,500 டன் அரிசி பொதுவினியோக திட்டத்துக்காக திருவாரூரில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

நீடாமங்கலம் 
இதைப்போல 

நீடாமங்கலத்தில் இருந்து வேலூருக்கு 1,200 டன் பொதுரக அரிசி பொதுவினியோக திட்டத்திற்காக நேற்று சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி பாமணி மத்திய சேமிப்புகிடங்கு, சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை, மன்னார்குடி வட்ட கிடங்கு ஆகியவற்றில் இருந்து லாரிகளில் அரிசி மூட்டைகள் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் முன்னிலையில் லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 29 பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து 1,200 டன் அரிசி மூட்டைகளுடன் சரக்கு ரெயில் வேலூருக்கு புறப்பட்டு சென்றது.

திருவாரூர், நீடாமங்கலம் ரெயில் நிலையங்களில் இருந்து மொத்தம் 2,700 டன் அரிசி பொது வினியோக திட்டத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment