Friday 23 September 2016

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி

முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதா 

முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காணொலி காட்சிகள் மூலம் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் ஜெயலலிதாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல் நலம் சீராக இருக்கிறது 

இதுகுறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘முதல்–அமைச்சர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக தங்களது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் இப்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும்’ கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment