Monday 5 September 2016

விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனை கள் ஊக்க உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2015-16-ஆம் கல்வியாண்டில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்தில் படிக்கும் தகுதியுடைய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் மாணவர் அல்லாதோரிடமிருந்து விளையாட்டு ஊக்க உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஊக்க உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதில் உயர்நிலை, மேல்நிலை பள்ளியில் படிப்பவர்கள் மற்றும் மாணவர் அல்லாதோருக்கு ரூ.10,000, கல்லூரி, பல்கலைக்கழகத்தில் படிக்கும் வீரர்களுக்கு ரூ.13,000 வழங்கப்படுகி றது. 1.7.2014 முதல் 30.6.2015 மாதம் வரையிலான கால கட்டத்தில் விளையாட்டுத் துறையில் வெற்றிகளைப் பெற்று தகுதியும் திறனுமுடைய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டுக்கழகங்கள், இந்திய விளையாட்டு குழுமம் நடத்தும் போட்டிகள் மற்றும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை அலுவலக வேலை நாட்களில் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ரூ.10 செலுத்தி செப்.10-ஆம் தேதிக்குள் பெற்று, தக்க அசல் சான்றிதழ் மற்றும் நகல் ஆகியவற்றுடன் நேரில் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04366-227158 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment