Wednesday 28 September 2016

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 149 பேர் வேட்பு மனு தாக்கல்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17 மற்றும் 19–ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 75 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று 2–வது நாளாக நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் நகராட்சி உறுப்பினர், பேரூராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 33 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 111 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 5 பேர் என மொத்தம் 149 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment