Sunday 27 April 2014

Kodikkalpalayam - பைத்துல்மால் அலுவலகம் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி










   நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் ஊர் உறவின் ஜமாஅத் கடந்த 2014 ஜனவரி 1ம் நாள் முதல் நமதூரில் இஸ்லாமிய சட்ட விதிமுறையுடன் செயல்பட்டு வரும் பைத்துமால் அமைப்பு சீரிய முறையில் ஏழை எளிய மற்றும் சிறு தொழில் முதலிட்டு வாய்ப்பு என அனைவருக்கும் வட்டியில்லா கடன் வசதியை அளித்து வருவது நாம் அறிந்ததே .
பைத்துமால் அமைப்பு தற்போது பள்ளிவாசலில் உள்ள வடக்குப்புற மாக பள்ளிவாசல் தெரு வழியாக மகாசும் மஹாலில் அமைய பெற்று உள்ளது .இந்நிலையில் தெற்கு தெரு வில் MABHS சங்கம் அருகே உள்ள நமது ஜமாஅத்துக்கு சொந்தமான இடத்தில நிரந்தமான அலுவலகம் அமைக்க தேர்வு செய்ய பட்டுள்ளது .


 



 

இந்நிலையில்  இன்று 27/04/2014 காலை 8.30 மணிக்கு புதிய அலுவலகம் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இதில் நமது ஜமாஅத் நிருவாகஸ்தர் கள் ,பிரதிநிதிகள் ,அங்கத்தினர்கள் ,பொதுமக்கள்
 என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்  -


கொடிக்கால்பாளையம்   பைத்துல்மால்    வளர்ச்சி அடைய உங்கள் ஜகாத் அல்லது சதக்க நிதிகளை அளித்து வட்டியில்லா கடன் முலமாக ஏழை எளிய மக்களை காக்க துணை நிற்க வேண்டும் .

இறைவன் அருளால் நிச்சயம் அமையும் இஸ்லாமிய வங்கி இன்ஷா அல்லாஹ் 

No comments:

Post a Comment