Thursday 24 April 2014

Kodikkalpalayam - நாகை தொகுதியில் விறு விறுப்பான வாக்குப்பதிவு





நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் வாக்குபதிவு இன்று 24/04/2014 காலை 7 மணி முதல் நமதூர் நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி யில் நடைபெற்றது .

இதில் வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகிறார்கள் .வெப் கேமரா முலமாக நேரடியாக கண்காணிக்கபடுகிறது

நாகை தொகுதியில் மொத்தம் வாக்காளர்கள் 12,09,925
மொத்தம் வாக்குச்சாவடி 1425
வெப் கேமரா முலம் கண்காணிக்க படும் வாக்குச்சாவடி 380

இதில் நிலவரம் விபரம்


 காலை  9 மணிக்கு                    17 . 13 %

காலை  11 மணிக்கு                    37. 3 %

மதியம் 1 மணிக்கு                      53 %

மாலை 3 மணிக்கு                      62.4%

மாலை 5 மணிக்கு                         70    %

இறுதி பதிவு                                      77.83%

என மக்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்

கொடிக்கால் பாளையத்தில் மதியம் நிலவரம் சுமார் 51 % வாக்குகள் பதிவு செய்து உள்ளதாக தெரிகிறது.

வாக்குப்பதிவு நிறைவடைந்தது .
கொடிக்கால் பாளையத்தில் வாக்குசாவடியில்

 மொத்தம் வாக்காளர்கள் 3310 இதில் 2098 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 62.5%சதவீதம் ஆகும்


 
நாகை தொகுதியில் இறுதி நிலவரம்
சட்டமன்ற தொகுதி வாரியா விபரம்
 தொகுதி                          மொத்த வாக்காளர்கள்                               பதிவான சதவிதம் 
163.நாகப்பட்டினம்               172439                                                          75%                              
  164.கீழ் வேளூர் தனி           156515                                                        82.92%
  165.வேதாரண்யம்                175298                                                        72.7%
  166. திருத்துறைப்பூண்டி தனி  216076                                              77.79%
  168.திருவாரூர்                         241979                                                    75.4%
  169.நன்னிலம்                            247618                                                  78%

 மொத்தம் வாக்காளர்கள் 1209925                                                      77.83%



நாகப்பட்டினம் (தனி) மக்களவைத் தொகுதியில் 77.64 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாகை மக்களவைத் தொகுதியில் நாகப்பட்டினம், வேதாரண்யம், கீழ்வேளூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியில் 6,05,857 ஆண்கள், 6,04,061 பெண்கள், 7 திருநங்கைகள் என மொத்தம் 12,09,925 வாக்காளர்கள் உள்ளனர். வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக இங்கு பதிவான வாக்குகள்:

நாகப்பட்டினம்: 61,941 ஆண்கள், 67420 பெண்கள் என 1,29,361 பேர் வாக்களித்துள்ளனர். சதவீதம் 75.02. கீழ்வேளூர் (தனி): 63,442 ஆண்கள், 66,419 பெண்கள் என மொத்தம் 1,29,861 பேர் வாக்களித்துள்ளனர். சதவீதம் 82.97.
வேதாரண்யம்: 63,343 ஆண்கள், 72,410 பெண்கள் என மொத்தம் 1,35,753 பேர் வாக்களித்துள்ளனர். 77.44 சதவீதம். திருத்துறைப்பூண்டி: 80,252 ஆண்கள், 87,756 பெண்கள் என மொத்தம் 1,68,008 பேர் வாக்களித்துள்ளனர். 77.75 சதவீதமாகும். திருவாரூர்: 88,378 ஆண்கள், 94,470 பெண்கள், திருநங்கைகள் இருவர் என மொத்தம் 1,82,850 பேர் வாக்களித்துள்ளனர். 75.56 சதவீதமாகும்.
நன்னிலம்: 95,365 ஆண்கள், 98,202 பெண்கள் என மொத்தம் 1,93,567 பேர் வாக்களித்துள்ளனர். சதவீதம் 78.17. நாகைத் தொகுதியில் மொத்தமுள்ள 12,09,925 வாக்காளர்களில் 4,52,721 ஆண்கள், 4,86,677 பெண்கள், 2 திருநங்கைகள் என 9,39,400 பேர் வாக்களித்துள்ளனர்.

6 பேரவைத் தொகுதிகளிலும் பதிவான மொத்த வாக்குகளின் சதவீதம் 77.64 ஆகும்.

No comments:

Post a Comment