Tuesday 22 April 2014

நாகப்பட்டினம் தொகுதி - பிரசார களம்

         நாகை தொகுதியில் வரும் ஏப்ரல் 24 ம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் அரசியல் கட்சிகள் செய்யும் பிரசார நிழல்வுகள் நம்மை சுற்றி வலம் வரும் போது நம் காதில் விழும் சில வைகள் இப்ப பார்க்கலாம் .

மொத்த வாக்காளர்கள் 12,07,725
 
  நான்கு முனையா   அல்லது ஐந்து முனையா     போட்டி என்று சொல்லும் அளவிற்கு நம்ம தொகுதியில் களம் கடுமையாக உள்ளது .
மேலும் மக்கள் தங்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில்
 பல நல்ல திட்டங்கள் நாம தொகுதியில் வராத என்ற குறையில் நமக்கு 
எல்லாம் உள்ளது .

 
நாகை தொகுதியில் அதிமுக வேட்பாளர் கோபாலை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு ,காவேரி பிரச்சனை மற்றும் தன் ஆட்சி யின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டார் .
 
திமுக தலைவர் கருணாநிதி 


   திமுக வேட்பாளர் விஜயன் 4ம் முறையாக போட்டியிடுவதால் கடந்த 15 ஆண்டுகள் தொகுதிக்கு செய்த பணிகள் மற்றும் செய்யத்தவறிய பணிகள் குறித்தே அதிகம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது .








டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க கையெழுத்திட்ட திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றார் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ்.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நாகை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே. கோபாலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு அவர் பேசியது:
தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு திமுக ஆட்சியில்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின் மீத்தேன் திட்டத்தை அமல்படுத்த கையெழுத்திட்டார். ஒப்பந்தம் கையெழுத்தாக இடையில் இருந்து உதவியவர்கள் திமுக வேட்பாளர்கள் ஏ.கே.எஸ். விஜயன் (நாகை), டி.ஆர். பாலு (தஞ்சை). எனவே மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தோல்வியடைச் செய்ய வேண்டும்.
நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.கே.எஸ். விஜயன் 15 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் எந்த மக்கள் பிரச்னைக் குறித்தும் பேசவில்லை. மத்திய அரசால் தமிழகத்தின் பல்வேறு உரிமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் உரிமைகளை மீட்க முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும். அவரின் கரத்தை வலுப்படுத்த வேண்டுமென்றார் காமராஜ்.
மேலும் காங்கிரஸ் ,பாமக ,இந்திய கம்யூ, உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டி கடுமையாக உள்ளதால்  வெற்றியை தீர்மானிப்பது கடினம் .

No comments:

Post a Comment